Tuesday, 14 July 2009

பள்ளி வாகனம்

மஞ்சள் நிற (பே)பருந்துகள்
வீதி வீதியாய், வீடு வீடாய்
அடை காத்த கோழிக்குஞ்சுகளை
கொத்திச் செல்கின்றன
வித்தியாச சிறைச் சாலைக்கு...

16 comments:

  1. வித்தியாசமான சிந்தனை. நன்றாக இருக்கிறது கவிதை !

    ReplyDelete
  2. //அடை காத்த கோழிக்குஞ்சுகளை//

    அடை காக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை என்பது சரியோ?

    ReplyDelete
  3. //சதங்கா (Sathanga) said...
    வித்தியாசமான சிந்தனை. நன்றாக இருக்கிறது கவிதை !//

    நன்றி சதங்கா


    //பாலா said...
    nalla irukku sir//
    நன்றி பாலா

    //ராமலக்ஷ்மி said...
    உவமை அருமை.//

    இன்று காலை எதேச்சையாக
    கதற கதற ஒரு குழந்தையை
    பேருந்தில் ஏற்றியதைக் கண்டதால்

    தொடர்ந்து படித்து பாராட்டுகிறீர்கள
    நன்றி ராமலக்ஷ்மி


    //பாலாஜி said...
    அடை காக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை என்பது சரியோ?//

    சரிதான்...
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. சிலுவைகளை விட்டுடிங்களே!

    ReplyDelete
  5. மிக அருமை கதிர்.
    தாவீதுவின் கவுன்கல் போல்
    நெத்தியடி.

    ReplyDelete
  6. அருமையான பார்வை.. இது தான் உண்மையில் நடப்பதும் கூட..

    ReplyDelete
  7. அடை காத்த கோழிக்குஞ்சுகளை
    கொத்திச் செல்கின்றன
    வித்தியாச சிறைச் சாலைக்கு...


    அருமை

    ReplyDelete
  8. இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்

    http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

    ReplyDelete
  9. //வால்பையன் said...
    சிலுவைகளை விட்டுடிங்களே!//
    ஆமாம்

    //பிரியமுடன்.........வசந்த் said...
    நல்ல உவமை கதிர்......//
    நன்றி வசந்த்

    //காமராஜ் said...
    மிக அருமை கதிர்.
    தாவீதுவின் கவுன்கல் போல் நெத்தியடி.//
    நன்றி காமராஜ். சிறிய இடைவெளிக்குப் பின் தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது

    //ச.செந்தில்வேலன் said...
    இது தான் உண்மையில் நடப்பதும் கூட..//

    நேற்று சாலையில் வரும் வழியில் கண்டது. நன்றி செந்தில்


    //sakthi said...
    அருமை//

    நன்றி சக்தி


    //பிரியமுடன்.........வசந்த் said...
    இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்//

    வலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் பட்டியலில் என்னை தேர்ந்தெடுத்ததை மிகப் பெரிய பாராட்டாக கருதுகிறேன். என்னை பெரிதும் உற்சாகப்படுத்தி வரும் தங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  10. அன்பு கதிர்,
    உங்கள் கவிதை அருமை. ஆனால் கோழியே கோழிக்குஞ்சுகளை பருந்துகள் இட‌ம் அனுப்பி வைப்ப‌து இங்கே தான்

    ReplyDelete
  11. //Unkal Thalan said...
    கோழியே கோழிக்குஞ்சுகளை பருந்துகள் இட‌ம் அனுப்பி//

    உண்மைதான்

    ReplyDelete
  12. கடைசி வரி
    வித்தியாச சிறைச்சாலைக்கு

    என்பதை கூட
    வித்யா (ச) சிறைச்சாலைக்கு
    என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்

    எது எப்படி இருப்பினும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
    வித்யா என்பது கல்விக்கூடம் வடமொழியில்
    நட்புடன்
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    ReplyDelete
  13. நன்றி ராகவேந்திரன்

    ReplyDelete

இது படிச்சீங்களா?