Monday, 12 April 2010

அடர்த்தியாய்.....

பேசும் மௌனம் 
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்


காயும் நிழல்
கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....


முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்


எச்சில் வாசம்
பிதுங்கி வழியும் பேருந்தில்
மடிமேல் இருத்தி பின் பறித்துச்சென்ற
மழலை வழியவிட்ட எச்சில்
பயணிக்கிறது காயாமலே

____________________________________

39 comments:

  1. ஆஹா ஆஹா 4,3,2,1 நம்ம வரிசை.

    எச்சில் வாசம் அருமை:))

    ReplyDelete
  2. எச்சில் வாசம் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. நல்லாருக்கு கதிர்..

    ReplyDelete
  4. பேசும் மௌனம்,காயும் நிழல்-
    முரண்பாடுகள் ஆனாலும் கவிதையாய் இனிக்கிறது!!!

    ReplyDelete
  5. //பேசும் மௌனம்
    விடிந்தது கல்யாண வீடு
    அடுக்கும் நாற்காலிகளில்
    கனமாய் உட்கார்ந்திருந்தது
    பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்//

    உணர்வு பூர்வமான வரிகள் சார்! மிக அருமை!

    ReplyDelete
  6. "பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்" "குப்பையாகிறது சமத்துவம்"

    "மழலை வழியவிட்ட எச்சில்"
    "சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்"
    அனைத்தும் அடர்த்தியாய் அழகாய் பேசுகின்றன.

    ReplyDelete
  7. முரண்
    பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்


    ..... சான்சே இல்லை. அடர்த்தியான வரிகள், கவிதைகள் முழுவதும்.

    ReplyDelete
  8. //பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்//

    அழுத்தம்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. ///பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்///

    மனதில் அழுந்திப்பயணிக்கிறது...

    ReplyDelete
  10. //பேசும் மௌனம்//

    குழந்தைகள் பறித்திட்ட ஒரு நாற்காலியின் இரு(க்)கைகளும்கூட....

    //காயும் நிழல்//

    ஆதரவில்லாமல் காயும் அன்புடனும்...

    //முரண்//

    பசியற்றவனின் பணக்காரத்தனமும்....

    //எச்சில் வாசம்//

    ஒரு மலடியின் வயிற்றில்...

    மிக நல்ல கவிதைகள்...யதார்த்தங்கள் குழைத்திட்ட வார்த்தைகள்...

    ReplyDelete
  11. சார்.. உங்களோடத நான் தொடர்ந்து படிச்சிகிட்டு இருக்கேன். கவிதைகளும் சரி.. கட்டுரைகளும் சரி... அருமையா இருக்குங்க... நீங்க எழுதுற எல்லாமே மனிதநேயத்தோட இருக்கு... தொடர்ந்து இதுமாதிரி எழுதுங்க....

    நன்றி
    சிவா...

    ReplyDelete
  12. கதிர்,

    எப்படி படிச்சாலும், இங்கிருந்து விலகிப் போகவே முடியவில்லை.

    ரொம்ப அருமை.

    ReplyDelete
  13. கதிர்..

    முரண்... இன்றைய சமத்துவத்தைக் கூறிய விதம்.... நன்று.

    எச்சில் வாசம்... இதம்..

    காயும் நிழல்.. கொதிக்கிறது.

    தொடருங்கள்..

    ReplyDelete
  14. கதிர்,

    என்ன சொல்ல, எனது வரிசை 1,2,3,4,.....4,3,2,1....

    சுத்தி சுத்தி படிக்கிற மாதிரி சூப்பரா இருக்குல்ல!

    பேச்சுக்களின் மிச்சம், மரங்களின் கண்ணீர், சமூகக்குப்பை, மழலை எச்சில் என எல்லாம் அருமை கதிர்!

    பிரபாகர்...

    ReplyDelete
  15. //பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்//

    அருமை!

    ReplyDelete
  16. மரத்தின் கண்ணீர். மிக அருமை

    ReplyDelete
  17. அருமை கதிர் 4 1 2 3 இது என் வரிசை

    ReplyDelete
  18. முரண் - டாப்..

    மத்ததும் முரணுக்கு கொஞ்சமும் குறைவில்லாமலே.. :))

    ReplyDelete
  19. //விடிந்தது கல்யாண வீடு
    அடுக்கும் நாற்காலிகளில்
    கனமாய் உட்கார்ந்திருந்தது
    பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்//

    நல்ல பார்வை!

    ReplyDelete
  20. \\பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்\\
    அருமை.
    எச்சில் வாசமும் மணக்கிறது.

    ReplyDelete
  21. மிக அருமை அத்தனையும்.

    ReplyDelete
  22. கதிர்,மழலைக்கான ஏக்கம் வரிகளில் அருமை.

    ReplyDelete
  23. //கொதிக்கும் வெயிலில்
    குதித்தோடும் குழந்தைகள்
    சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
    தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....//

    கவிதைகள் தங்கி விடுகிறது மனதில் முரண்-ணாய்...அருமை கதிர் அண்ணே...

    ReplyDelete
  24. மன்னிக்கவும் .....எழுத்துப்பிழை வந்து விட்டது ...

    கவிதை உள்ளத்தை தொட்டு சென்றது

    ReplyDelete
  25. அடுக்கும் நாற்காலிகளில்
    கனமாய் உட்கார்ந்திருந்தது

    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்

    ஈரம் காயாமல் பயணிக்கும் எச்சில்

    அருமை........

    செந்தில்குமார்.அ.வெ

    ReplyDelete
  26. ஆஹா ஆஹா அருமை அருமை

    ReplyDelete
  27. ரொம்ப நல்லாயிருக்கு கதிர் சார்.

    ReplyDelete
  28. பேசும் மௌனம்
    காயும் நிழல்
    முரண்
    எச்சில் வாசம்

    அனைத்தும் அருமை கதிர்.
    முரணை வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete
  29. ச‌ப்த‌த்தின் ம‌வுன‌ம்,க‌ண்ணீர் நிழ‌ல்,
    ப‌சித்தும் புசித்தும் ச‌ம‌த்துவ‌ம்,
    ப‌ய‌ண‌த்தில் வாயின் எச்சில்.
    சாதா நிக‌ழ்வுகளுக்கு,
    சாகாவ‌ர‌ம் த‌ந்த‌ க‌திரின் நோக்கு
    நேக்கு புதிர்.

    ReplyDelete
  30. அனைத்தும் அருமை . மிகவும் சிறப்பான சிந்தனைகள் . . உங்களின் வார்த்தைகளில் சமூக அக்கறை தெரிகிறது .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  31. ம்ம்ம்...வழக்கம்போல தான் இருக்கு..




    கலக்கலா:-)

    ReplyDelete
  32. நான்கும் அழகான அளவான கவிதைகள் கதிர்.


    ரேகா ராகவன்
    (சிகாகோவிலிருந்து

    ReplyDelete
  33. மிஞ்சியவன் வீசிய சோறு வரியவனின் பசியாய் மாறுகிறது!! குப்பைத்தொட்டிகள் காலியான மாற்றம்,சமத்துவம் குப்பையாகிறது!! மாற்றங்கள் மட்டும் தான் உலகில் மாறாதது.(மாறுதல்.பிளாக்ஸ்பாட்.காம்)பெயருக்கேற்ற கவிதை மனமுவந்த எம் பாராட்டுதல்கள் உடன் சித்திரை திருநாள் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  34. மிகவும் அழகிய கவிதைகள்.

    ReplyDelete
  35. //முரண்
    பசித்தவன் வாரிக்கொள்கிறான்
    மிஞ்சியவன் வீசிய சோற்றை
    காலியாகிறது குப்பைத் தொட்டி
    குப்பையாகிறது சமத்துவம்//

    மிக அருமையான சமத்துவக்கவிதை.. மனதை வருத்தும் கவிதையும்...

    ReplyDelete

இது படிச்சீங்களா?