Friday, 18 June 2010

வேறென்ன?


விடிய விடிய சேகரித்துப்
பாதுகாத்த கனவுப் பெட்டகம்
விடிந்ததும் காலியாக

*****

வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே

*****

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு

*****

மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும்  மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை

*****

63 comments:

  1. nice... நல்லாருக்கு..

    ReplyDelete
  2. ||வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது
    கால இறகு எதிர்பாராததையே||

    எதிர்பாராததையும்...

    ReplyDelete
  3. ||எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு||

    புது வடிவங்கள் பிடித்ததாலும் இருக்கலாம்ல.. ஹிஹி..

    ReplyDelete
  4. ||மலை உச்சியைப்
    புணர்ந்து பிரியும் மேகம்
    விட்டுச் செல்கிறது குளிரை||

    இதுக்கு ரொம்ப அர்த்தம் தெரியுது.. (ஆனா உங்களுக்கு அந்த அர்த்தம் தெரிஞ்சிச்சா... :)))

    ReplyDelete
  5. பிரிச்சு எடுத்துடீங்க வார்த்தைகளை...

    ReplyDelete
  6. விழுந்து விழுந்து வாசித்த
    இவரது இன்றைய இடுகை
    புலப்படவே இல்லை பிழை!


    இப்படிச் சொல்லலாம்தான்... எதுவும் கிடைக்கலைன்னா இருக்கவே இருக்கு ஒற்று!

    //மணலை கலைத்து//

    மணலைக் கலைத்து

    ReplyDelete
  7. /விடிய விடிய சேகரித்துப்பாதுகாத்த கனவுப் பெட்டகம்விடிந்ததும் காலியாக///


    உண்மைதான்

    ReplyDelete
  8. எல்லாம் அருமை! அந்த லாஸ்டு ஊட்டி அனுபவமாங்ணா? குளிர் விட்டுப் போச்சா:))

    ReplyDelete
  9. நான்கு கவிதைகளுமே அருமையான அர்த்தங்களுடன் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது


    //
    வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது
    கால இறகு எதிர்பாராததையே
    //

    ஒரு சின்ன கருத்து

    வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது கால இறகு
    எதிர்பாராததையே

    இப்படி இருந்தால் புரிதல் இன்னும் சுலபமாக இருக்குமோ என்று தோன்றுகிறது

    நன்றி

    ReplyDelete
  10. பால அண்ணே எதிர் கவிதை இல்லையா ?

    ReplyDelete
  11. கதிர்...புரட்டிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள்.

    ReplyDelete
  12. //விடிய விடிய சேகரித்துப்பாதுகாத்த கனவுப் பெட்டகம்விடிந்ததும் காலியாக//

    இன்னும் கொஞ்சம் தூங்கியிருக்கலாம்..

    //வாழ்க்கைப் பக்கங்களில்வரைந்து வைக்கிறது கால இறகு எதிர்பாராததையே//

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......

    //எந்த வடிவமும் பிடிப்பதில்லை பாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

    காற்றுடன் விளையாடும் மணலுக்கும்..

    //மலை உச்சியைப் புணர்ந்து பிரியும் மேகம் விட்டுச் செல்கிறது குளிரை//

    பனிக்கருவினை புற்களுக்கு கொடுத்தபடியே...

    ReplyDelete
  13. //மலை உச்சியைப்
    புணர்ந்து பிரியும் மேகம்
    விட்டுச் செல்கிறது குளிரை//

    இதற்கு பேர்தான் குளிர் விட்டுப்போச்சுன்னு சொல்றாங்களோ?

    ReplyDelete
  14. எல்லாமே நல்லாருக்கு கதிர்.

    //எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு//

    அற்புதம் இது!

    ReplyDelete
  15. நசரேயன் said...

    பால அண்ணே எதிர் கவிதை இல்லையா ?//

    போட்டுட்டமில்ல:)). அதும் உங்களுக்கு கிருகிறுத்துப் போகுமே:))

    ReplyDelete
  16. //
    வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது
    கால இறகு எதிர்பாராததையே //

    இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு நண்பரே...

    வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்...

    ReplyDelete
  17. தனித்துச் சொல்ல முடியவில்லை...

    அத்தனையும் அருமை...

    ReplyDelete
  18. கதிர் எல்லாமே நல்லா இருக்கு:)

    ம்ம்ம்... ஒரே போட்டியா இருக்கே :)

    ReplyDelete
  19. //
    வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது
    கால இறகு எதிர்பாராததையே
    //


    ஆமாம்! கதிர் சரியா சொன்னீங்க :)
    கால இறகு வார்த்தை அற்புதம் !!

    ReplyDelete
  20. //
    பழமைபேசி said...
    விழுந்து விழுந்து வாசித்த
    இவரது இன்றைய இடுகை
    புலப்படவே இல்லை பிழை!


    இப்படிச் சொல்லலாம்தான்... எதுவும் கிடைக்கலைன்னா இருக்கவே இருக்கு ஒற்று!

    //மணலை கலைத்து//

    மணலைக் கலைத்து
    //

    கண்ணுலே விளக்கண்ணை ஊத்தி தேடுறது இதுதானா கதிர் :)

    ReplyDelete
  21. எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு

    .... அழகு.

    ReplyDelete
  22. Last two are my favorites :)

    Very nice Kathir!

    -priyamudan
    seral

    ReplyDelete
  23. முடிவில்லாத வார்த்தை வேறென்ன?...அதையே பிரதிபலிக்கிறது கவிதை.

    ReplyDelete
  24. நல்ல கவிதைகள். எல்லாம் அருமை என்றாலும் இது அழகு:
    //எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு//

    ReplyDelete
  25. காலம் மற்றும் இயற்கையை ஒட்டிய அருமையான் கவிதைகள் ..

    ReplyDelete
  26. வேறென்ன?
    பிறகென்ன??
    கதிருக்கு எதிரு!!

    ReplyDelete
  27. கவி வரிகள் அருமை அத்தனையும் முத்துக்கள் போல. பாராடுக்கள்.

    ReplyDelete
  28. வேறென்ன?
    பிறகென்ன??
    கதிருக்கு எதிரு!!//

    வேறென்ன?
    பிறகென்ன??
    அதுக்கென்ன?

    க்திருக்கு எதிருக்கு எதிரு.

    ReplyDelete
  29. //எந்த வடிவமும் பிடிப்பதில்லைபாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

    romba nallaayirukku.

    ReplyDelete
  30. //எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு//

    நல்லாருக்குங்க கதிர் சார்

    ReplyDelete
  31. //விடிய விடிய சேகரித்துப்
    பாதுகாத்த கனவுப் பெட்டகம்
    விடிந்ததும் காலியாக
    //

    என்னோட சாய்ஸ் இது கதிர் சார்! நிறைய கனவுகள் ஏன் கலையுதுன்னு தோணுது....!

    ReplyDelete
  32. கடைசி இரண்டு செம கிளாஸ் கதிர்.

    ReplyDelete
  33. @@ கலகலப்ரியா
    நன்றி பிரியா
    //புது வடிவங்கள் பிடித்ததாலும் இருக்கலாம்ல.. //

    இருக்கலாம்

    //இதுக்கு ரொம்ப அர்த்தம் தெரியுது.. (ஆனா உங்களுக்கு அந்த அர்த்தம் தெரிஞ்சிச்சா... :)))//

    அடப்பாவிகளா


    @@ இராமசாமி கண்ணண்
    நன்றி கண்ணன்

    @@~~Romeo~~
    நன்றி ரோமியோ


    @@ ராசராசசோழன்
    நன்றி சோழன்


    @@ பழமைபேசி
    மாப்பு இன்னிக்கு நல்லாத் தூக்கம் வரும்ங்க

    நன்றிங்க அன்புக்கு

    @@ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம்
    நன்றி உலவு


    @@ வானம்பாடிகள்
    ஊட்டி... அவ்வ்வ்வ்
    நன்றிங்கண்ணா

    @@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
    நன்றி சங்கர்

    @@ VELU.G
    நீங்கள் சொல்வதும் நன்றாக உள்ளது

    நன்றி வேலு


    @@ நசரேயன்
    போட்டுட்டாருங்க நசரேயன்

    @@ பிரேமா மகள்
    நன்றி சுபி


    @@ ஹேமா
    நன்றி ஹேமா

    @@ க.பாலாசி
    கவிதையாய் பின்னூட்டம்
    நன்றி பாலாசி


    @@ இயற்கை ராஜி
    வட போச்சா!!!


    @@ Sangkavi
    அப்படியும் இருக்கலாம் சங்கமேஸ்

    @@ பா.ராஜாராம்
    நன்றி பா.ரா


    @@ கமலேஷ்
    நன்றி கமலேஷ்

    @@ அகல்விளக்கு
    நன்றி ராஜா

    @@ RAMYA
    ஆமாங்க ரம்யா...

    மாப்பு பூதக்கண்ணாடி வச்சி தேடினாரோ

    நன்றி ரம்யா

    @@ Chitra
    நன்றி சித்ரா


    @@ சேரல்
    நன்றி சேரல்


    @@ அன்புடன் அருணா

    நன்றி அருணா


    @@ ராமலக்ஷ்மி
    நன்றி ராமலஷ்மி

    @@ யுக கோபிகா
    நன்றி கோபிகா

    @@ நிலாமதி
    நன்றி நிலா


    @@ ILA(@)இளா
    நடத்த்த்த்துங்க இளா
    நன்றி

    @@ நாடோடி இலக்கியன்
    நன்றி பாரி

    @@ பிரியமுடன் பிரபு
    நன்றி பிரபு

    @@ நேசமித்ரன்
    நன்றி நேசன்

    ReplyDelete
  34. @@ dheva
    ஆமாங்க...
    கரையும் கனவு ஒரு வலியே

    நன்றி தேவா

    @@ ஜெரி ஈசானந்தன்
    நன்றி ஜெர்ரி

    ReplyDelete
  35. இதைச் சுற்றித்தானா வானம்பாடி,பழமை வண்டுகள் சுற்றுகின்றனள:)

    ReplyDelete
  36. எந்த வடிவமும் பிடிப்பதில்லைபாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

    இதுதான் ரொம்ப அருமை..

    ReplyDelete
  37. நல்லா இருக்கு. இதை விட பழமை அண்ணனின் எதிர் பதிவு இன்னும் அருமை

    ReplyDelete
  38. எல்லோரும் ஒரு முடிவு பண்ணி கலக்கறீங்களே..

    ReplyDelete
  39. ஒரிஜினல் இங்க இருக்குதா? அதானே பார்த்தேன்.

    அழகழகான கவிதைகள் கதிர்.!

    ReplyDelete
  40. படிக்கும் சில நொடிகளில், யோசிக்க, ரசிக்க வைத்திருப்பது அழகு

    ReplyDelete
  41. மலை உச்சியைப்
    புணர்ந்து பிரியும் மேகம்
    விட்டுச் செல்கிறது குளிரை
    //
    அருமை!

    இந்தக் கவிதை எவ்வளவு பின் விளைவுகள ஏற்படுத்தி இருக்கு தெரியுமா?
    :)

    ReplyDelete
  42. நல்லா இருக்குங்க கதிர்

    ReplyDelete
  43. ரொம்ப அருமையா இருக்குங்க.. ரெண்டு மூணு வாட்டி படிச்சுப் பாத்துட்டேன்.. எது ரொம்பப் பிடிச்சுதுன்னு பாக்க.. :)) முதலாமானது...

    ReplyDelete
  44. கதிர் உண்மையிலேயே
    நிறைவாவும் சந்தோசமாகவும் இருக்கு. செம்மொழி மாநாட்டு நிகழ்வில் நீங்கள் இடம் பெறுவது.
    வலை நண்பர்களுக்கு பெருமிதம்.

    ReplyDelete
  45. வேறென்ன? சொல்ல
    எதிர்பாராமல்
    வாழ்க்கை பக்கங்களை
    நிரைய புரட்டி
    பார்த்திருப்பிங்க போலிருக்கே...

    ReplyDelete
  46. 2 ம், 3ம் பிடிச்சிருக்கு.
    ||வாழ்க்கைப் பக்கங்களில்
    வரைந்து வைக்கிறது
    கால இறகு எதிர்பாராததையே||

    இது ரொம்பவும்...

    ReplyDelete
  47. @@ ராஜ நடராஜன்

    மொத்தம் 7 வண்டுங்க

    @@ 【♫ஷங்கர்..】
    நன்றி ஷங்கர்

    @@ thenammailakshmanan

    நன்றிங்க


    @@ சின்ன அம்மிணி


    @@ தாராபுரத்தான்
    நன்றிங்கண்ணா

    @@ ஆதிமூலகிருஷ்ணன்
    ஒரிஜினலவிட எதிர்கள் அழகாவும் இருக்குங்க ஆதி

    @@ பின்னோக்கி
    நன்றி பின்னோக்கி

    புனிதா||Punitha
    நன்றி புனிதா

    @@ அத்திவெட்டி ஜோதிபாரதி
    நன்றி ஜோ.பா

    @@ r.v.saravanan
    நன்றி சரவணன்

    @@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
    மிக்க நன்றி

    @@ காமராஜ்
    மிக்க நன்றி தோழரே

    @@ செந்தில்குமார்
    ஆகா

    @@ புலவன் புலிகேசி
    நன்றி முருகவேல்

    @@ அம்பிகா
    நன்றிங்க

    ReplyDelete
  48. எந்த வடிவமும் பிடிப்பதில்லை
    பாலை மணலை கலைத்து
    விளையாடும் காற்றுக்கு

    யார் என்ரு பார்க்காமல் வீசும் காற்றுக்குக் கூட, பிடிக்கும் பிடிக்காது என்ற நிலை உண்டு போலிருக்கிறதே

    ReplyDelete
  49. அன்பின் கதிர் - அனைத்துக் குறுங்கவிதைகளூம் அருமை. மிக மிக இரசித்த்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  50. அன்பின் கதிர் - கனவுப் பெட்டகத்தில் இருந்த சேமிப்பு அத்தனையும் மனப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறதே - எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  51. அன்பின் கதிர் - வாழ்க்கைப் பங்கங்களீல் அனைத்தையும் வரையாதா கால இறகுகள் ? கலகலப்ரியாவின் மறுமொழ்ப்படி எதிர்பாராததையும் என்றிருக்கலாமெ - அனைத்தையும் வரையும் என்று தான் நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  52. அன்பின் கதிர் - பாலாசி கூறியபடி காற்றுக்கு மட்டுமல்ல மணலுக்கும் பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  53. அன்பின் கதிர் - மலை உச்சி - புணர்தல் - மேகம் - விளைவு குளிர் மட்டும் தானா - மழை வெள்ளம் பனி இவைகள் எல்லாம் என்ன வாயிற்று ? இக்குறுங்கவிதையை எழுதும் போது மனதில் இருந்த சிந்தனை என்ன ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  54. ரசித்தேன் அருமை...

    ReplyDelete

இது படிச்சீங்களா?