Friday, 25 June 2010

தமிழ் இணைய மாநாடு - நமது வலைப்பதிவர்கள்..

அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு
 


பார்வையாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உணவரங்கங்கள்


பதிவுலக நண்பர்கள்
சஞ்சய், தமிழ்மணம் காசி ஆறுமுகம்


ஓசை செல்லா, நான், காசி ஆறுமுகம்
 


இணைய மாநாட்டில் காசி ஆறுமுகம்

இணைய மாநாட்டில் நா.கணேசன்

முரசொலி மாறன் அரங்கு முகப்பு

 பதிவுலக நண்பர்கள்
 

  பதிவர், கவிஞர் திலகபாமா

திருவள்ளுவர் (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க)

சுமார் மூன்று கி.மீ தூரத்திற்கு நகரமுடியா வண்ணம் மக்கள் வெள்ளம்







எதையும் பொருட்படுத்தாமல்
மக்கள் சுகாதாரத்திற்காக உழைத்து துவளும் கால்கள்

ஹி..ஹி...எங்க ஊரு வண்டியாம் 
(இங்க ஒருமுறைகூட பார்த்ததில்லை)


குறிப்பு:

தமிழக அரசுடன் இணைந்து உத்தமம் அமைப்பு நடத்தும் தமிழிணைய மாநாட்டில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். முதலில் 25ம் தேதி என கூறப்பட்டது, பின்னர் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 24ம் தேதி மாநாட்டிற்குச் சென்றபோது, நிகழ்வை நடத்தி வரும் உத்தமம் அமைப்பாளர்கள் இடையே இருந்து வரும் கடும் குழப்பங்களால் பெரும்பாலான பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை, இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்கள், இதையறிந்து வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேரம் ஒதுக்க உத்தமம் அமைப்பு முன் வந்தது. எனக்கான நேரம் 26ம் தேதிக்கு ஒதுக்கப் படுவதாக அறிந்தேன். 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________________

55 comments:

  1. துரோக வரலாறை கருணாநிதி திருத்த பார்க்கிறார்...தமிழினால் மட்டுமே...தமிழனால் மட்டுமே மிக எளிதாய் மன்னிக்கமுடிகிறது....

    ReplyDelete
  2. ஏன் அங்கிள்... பாலிடிக்ஸ் எல்லா இடத்திலேயும்தான் இருக்கும்... நீங்க உங்க கருத்தை பதிவு செய்யவாவது மறுபடியும் போய் பேசலாம்தானே?

    ReplyDelete
  3. yen facebook nanbar sir ninga...

    nalama...nalla pathivu..

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  4. //நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

    அடடா..

    ReplyDelete
  5. அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க.

    ReplyDelete
  6. //ஹி..ஹி...எங்க ஊரு வண்டியாம் (இங்க ஒருமுறைகூட பார்த்ததில்லை)//

    நாம ரயில்வே ஸ்டேஷன் பக்கம்தானே சுத்துவம். அப்புறம் இது எப்புடி கண்ணுல படும்?

    ReplyDelete
  7. நல்ல படங்கள் கதிர்...

    சாமான்யர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  8. படங்கள் அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. படங்கள் அருமை...இது ஒரு வரலாற்று
    நிகழ்வு...கட்டாயம் நீங்கள் இதில் பங்கு
    கொள்ள வேண்டும்..உங்கள் முடிவை
    மறு பரிசீலனை செய்யுங்கள்..

    ReplyDelete
  10. போன காரியத்தை வெற்றியோடு முடித்து வாருங்கள் கதிர்

    ReplyDelete
  11. \\சி. கருணாகரசு said...

    அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க.
    \\
    மிகச்சரி!! கண்டிப்பாக எழுதுங்க கதிர் சார்!!!

    படங்கள் அருமை!

    ReplyDelete
  12. சி. கருணாகரசு said...

    அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க.

    Repeat.....

    ReplyDelete
  13. //ஹி..ஹி...எங்க ஊரு வண்டியாம் (இங்க ஒருமுறைகூட பார்த்ததில்லை)//

    நாம ரயில்வே ஸ்டேஷன் பக்கம்தானே சுத்துவம். அப்புறம் இது எப்புடி கண்ணுல படும்?//


    atahnee?

    ReplyDelete
  14. படங்கள் பகிர்வுக்கு நன்றி!

    பார்வையாளர்கள் கூட்டம் தெருவில் அலைமோதுகிறது.... அலை மோதியதில் அரங்கில் வெறுமையோ??

    சாமன்யனின் நேரமும் விலை மதிப்பற்றது எனச் சொல்லாமச் சொல்லிய விதம் நன்று!

    http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=25696

    ReplyDelete
  15. @@ மக்களே நன்றி

    @@ மாப்பு தினமலர் தேவையில்லாம இந்த விடயத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்... பதிவர்கள் சத்தம் போட்டதாகச் சொன்னது பொய். எதேச்சையாக வந்த அமைச்சர். திருமதி. பூங்கோதை அவர்களுக்கு இது தெரியவர, அவர்கள் உத்தமம் அமைப்பை அழைத்து பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கச் சொன்னார். வெளிநாட்டு தமிழர்கள் சமாதானம் செய்தாத சொன்னதெல்லாம் சும்மா தினமலர் விட்ட டுபாக்கூர் செய்திங்க

    ReplyDelete
  16. /சாமன்யனின் நேரமும் விலை மதிப்பற்றது எனச் சொல்லாமச் சொல்லிய விதம் நன்று!/
    அதே அதே!

    ReplyDelete
  17. //26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால்//

    ம்ம்ம்... பொழச்சிப்போவட்டும் விடுங்க... அப்பால பாத்துக்கலாம்...

    ReplyDelete
  18. தமிழினால் மட்டுமே...தமிழனால் மட்டுமே மிக எளிதாய் மன்னிக்கமுடிகிறது....

    ReplyDelete
  19. அங்கு போக விருப்பம்/நேரம் இல்லாவிட்டால், ப்ரவகிக்கும் உணர்வினை ’கசியும் மெளனத்தில்’ பதிவு செய்யலாமே?

    ReplyDelete
  20. படங்களுக்கு நன்றி.

    நீங்க தயாரிச்சு வச்சுருந்த உரையைப் பதிவிலாவது போடுங்களேன்.

    ReplyDelete
  21. உத்தமமான வேலை...

    பாவம் பொழைச்சு போட்டும் விடுங்க...

    ReplyDelete
  22. ஆஹா.. உங்களை நேரில் பார்க்கலாம்னு இருந்தேன்.. நிறைய குளறுபடிகள் நடக்கிறது போல அங்கே...?

    சரி விடுங்கள்... நீங்கள் பங்கு பெருவதானால் முன்கூட்டியே அறிவியுங்கள்...

    இதுவரை மாநாட்டிற்கு செல்லும் எண்ணம் இல்லை.. நீங்கள் வந்தால் பார்க்கலாம்..

    நன்றி..

    ReplyDelete
  23. பிளாகின் சக்தி அறியாதவர்கள்.
    பிளாகரின் மகத்துவம் புரியாதவர்கள்.

    ReplyDelete
  24. as Thalaivar said, the doubtful invittees Prakash Yechuri & D Raja have come.

    ReplyDelete
  25. சரியான திட்டமிடல் தேவை..

    ReplyDelete
  26. படங்கள் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. சி. கருணாகரசு said...

    அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க.


    .... correct! :-)

    ReplyDelete
  28. //நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

    அதனால என்ன அண்ணே நாம இங்கே இருந்து அடிச்சாலே போதும்...ஆடிப்போயிற மாட்டங்க...

    ReplyDelete
  29. இந்த விழாவிற்கும், இலங்கை ஐஃபா-விற்கும் ஒன்னும் பெரிய வித்யாசமில்ல. உங்களாலக் கலந்து கொள்ள முடியாமல் போனது நல்லதே. ஒரு வேலை நீங்கள் அழைக்கப் படாமலிருந்திருந்தால் நிச்சயம் இந்த மாநாடு தேவைதானா? என எழுதியிருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நன்று.

    ReplyDelete
  30. // goma said...
    பிளாகின் சக்தி அறியாதவர்கள்.
    பிளாகரின் மகத்துவம் புரியாதவர்கள்// அட ப்ளாக உட்டுத் தள்ளுங்க. மனித உணர்வே இல்லாதவங்க அவுங்க.

    ReplyDelete
  31. படங்களின் பகிர்வுக்கு நன்றி ...............

    ReplyDelete
  32. இன்றைய நிகழ்சி மிகவும் இனிதாக நடைபெற்றது கதிர்.. நீங்கள் இல்லாதது பெரும் குறையே.. 10 பேர் பேசினார்கள்.. நாளை 10 பேர் பேசுகிறார்கள்.. எந்த நிர்பந்தமும் இல்லாமல் தேவையான நேரம் எடுத்துக் கொண்டு அனைவரும் சிறப்பாக பேசினார்கள்.

    ReplyDelete
  33. படங்கள் அருமை கதிர்..

    ||தமிழ்மணம் காசி ஆறுமுகம், சஞ்சய்||

    சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...

    ReplyDelete
  34. பொது அரங்கில் நேற்றை விட இன்று கூட்டம் அதிகம் கதிர்.. மாலையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் இருந்திருப்பார்கள்.. அரங்கிலிருந்து சாலையை அடைய 2 கிமீ தூரம் கடக்க 1 மணி நேரம் ஆச்சி :(

    ReplyDelete
  35. //சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...//

    இத எப்டி புரிஞ்சிக்கிறதுன்னே தெரியலையே.. தூக்கி தூரம் போட சொல்றிங்களா? பேர் மட்டும் முன்னாடி போட சொல்றிங்களா? :)

    ReplyDelete
  36. ||njaiGandhi™ said...
    //சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...//

    இத எப்டி புரிஞ்சிக்கிறதுன்னே தெரியலையே.. தூக்கி தூரம் போட சொல்றிங்களா? பேர் மட்டும் முன்னாடி போட சொல்றிங்களா? :)||

    பாவம் பக்கத்தில நிக்கறவங்கள சொட்டைன்னு யாராவது நினைச்சிடப் போறாங்களேன்னு ஒரு அக்கறைல சொன்னேன்..

    மத்தபடி தூக்கி என்ன தூக்கில கூடப் போடலாம்.. எனக்கு ஆட்சேபனை இல்லை.. ஸோ.. எப்டி வசதியோ அப்டிப் புரிஞ்சுக்கலாம் சஞ்சய்வாள்.. :o)

    ReplyDelete
  37. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  38. புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  39. ஒரு விழாவை ஒருங்கிணைப்பு செய்பவர்களின் லட்சணத்தைப் பாருங்கள். மனிதவளம் என்று சொல்லக்கூடிய ம்க்கல் சக்தி மிகுந்திருக்கும் ஒரு தேசத்தில் நிகழ்வுகளை திட்டமிட்டு செய்ய முடியவில்லை எனில் எத்தனை பெரிய குழப்பம்கொண்ட மூளைகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

    //முதலில் 25ம் தேதி என கூறப்பட்டது, பின்னர் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 24ம் தேதி மாநாட்டிற்குச் சென்றபோது, நிகழ்வை நடத்தி வரும் உத்தமம் அமைப்பாளர்கள் இடையே இருந்து வரும் கடும் குழப்பங்களால் பெரும்பாலான பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை//

    மனிதர்களின் நேர விரயத்துக்கு விலை ஏதும் இல்லை அதே நேரத்தில் அடுத்தவரின் நேரத்தை விரயம் செய்துவிட்டோமே என்ற ஒரு தன்முனைப்பும் இல்லாமல் மழுங்கிப் போய் உள்ளவர்கள் எல்லாம் ஏன் நிர்வாகம் செய்ய வரவேண்டும்.

    //இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்கள், இதையறிந்து வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேரம் ஒதுக்க உத்தமம் அமைப்பு முன் வந்தது. எனக்கான நேரம் 26ம் தேதிக்கு ஒதுக்கப் படுவதாக அறிந்தேன். 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

    நேரம் இருந்தாலும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து கதிர். உங்களின் விழா பேச்சினை கட்டுரையாக கொடுங்கள்...லட்சோப லட்ச நாடு உள் நாடு மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு....முறையாய் அது போய்ச்சேரும். நிர்வாக குழறுபடிகளல் ஏற்பட்ட குழப்பங்களுக்கு திறமின்மைதான் காரணமென்று தெளிவாக தெரிகிறது. நிறைய கூகுட்டம், நடை முறை சிக்கல்கள் ஏராளம் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மழுப்பட்ல்கள். எவ்வளவு பெரிய கூட்டம் என்றாலும் அதனை நிர்வாகம் செய்வதற்கேற்ற மக்கள் சக்தி நம்மிடம் இருக்கிறது.

    மற்றபடி....உங்களின் கட்டுரைக்காக காத்திருக்கிறோம்...கதிர்....ஆவலுடன்

    ReplyDelete
  40. வாழ்த்தும் நன்றியும் கதிர்.

    ReplyDelete
  41. தமிழனுக்கு சுடுகாடு! தமிழுக்கு மாநாடு!


    - ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com

    ReplyDelete
  42. // 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

    வட போச்சே....

    ReplyDelete
  43. ////பதிவர்கள் சத்தம் போட்டதாகச் சொன்னது பொய். எதேச்சையாக வந்த அமைச்சர். திருமதி. பூங்கோதை அவர்களுக்கு இது தெரியவர, அவர்கள் உத்தமம் அமைப்பை அழைத்து பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கச் சொன்னார். வெளிநாட்டு தமிழர்கள் சமாதானம் செய்தாத சொன்னதெல்லாம் சும்மா தினமலர் விட்ட டுபாக்கூர் செய்திங்க////

    விடுங்க அண்ணா ... பார்த்துக்கலாம் ..

    ReplyDelete
  44. படங்கள் அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. படங்கள் அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. திரு விழா சந்தையில் வெயிலில் புரண்டு விளையாடச் செய்வது ஞாயமா?

    ReplyDelete
  47. //அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க//

    நானும் சொல்லிக்கறேன்..

    ReplyDelete
  48. படங்களுக்கு நன்றி. மாநாட்டு அனுபவங்களை எழுதலாமே கதிர்.

    ReplyDelete
  49. கருணாகரசு சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

    படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  50. நல்ல புகைப்படங்கள். தொகுப்புப் பதிவு எப்போ...

    ReplyDelete
  51. நல்ல பதிவு கதிர் அண்ணா

    படங்களில் நல்ல கருத்து...

    குழந்தையிடம் கொடுத்து பிடிங்கி அழவைப்பது போல இந்த அமைப்பாளர்கள் நடவடிக்கை....

    ReplyDelete
  52. படங்கள் அருமை வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete

இது படிச்சீங்களா?