Thursday, 23 December 2010

சிறகை விரிக்கும் சிறை


உயிர் பெறும் துப்பாக்கி
ஒரு போதும் அறிவதில்லை
உயிர் பறிக்கத்தான் என்பதை

-0-

பள்ளி மைதானங்கள்
பசியோடு தவிக்கின்றன
விடுமுறை நாட்களில்

-0-

மௌனம் சிறகு விரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
வார்த்தைகளில்

-0-

நிகழ்காலக் குற்றங்கள்
விடுதலை அடைகின்றன
நாளைய பெருங்குற்றங்களில்

-0-

25 comments:

  1. நிகழ்காலக் குற்றங்கள்
    விடுதலை அடைகின்றன
    நாளைய பெருங்குற்றங்களில் ////

    இதற்காகவே பெரும் குற்றங்கள் உருவாக்கப்படுகிறது சார்

    ReplyDelete
  2. //பள்ளி மைதானங்கள்
    பசியோடு தவிக்கின்றன
    விடுமுறை நாட்களில்//

    WOW... Super anna...

    ReplyDelete
  3. /உயிர் பெறும் துப்பாக்கி
    ஒரு போதும் அறிவதில்லை
    உயிர் பறிக்கத்தான் என்பதை
    //

    செம செம .!! நல்லா இருக்கு அண்ணா ..

    ReplyDelete
  4. //மௌனம் சிறகு விரிக்கிறது
    அடுத்தடுத்து சிறைப்படும்
    வார்த்தைகளில்
    //

    எல்லாமே கலக்கல் அண்ணா ..!

    ReplyDelete
  5. நான்கும் நன்று.

    //பள்ளி மைதானங்கள்
    பசியோடு தவிக்கின்றன
    விடுமுறை நாட்களில்//

    மிக அருமை.

    ReplyDelete
  6. முதலாவது ஏனோ மனதில் படிகிறது !

    ReplyDelete
  7. நச்னு நாலு கவிதைகள் ....

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  8. /மௌனம் சிறகு விரிக்கிறதுஅடுத்தடுத்து சிறைப்படும்வார்த்தைகளில்/

    இது டாப்பு

    ReplyDelete
  9. உங்க சிந்தனை சிறைபடுத்தாமல் சிறகு விரித்தாடுகிறது. நன்றாக இருக்கு கதிர்.

    நிறைய கவிதை போட்டு எதுக்காவது ஒத்திகை நடக்குதுங்களா! எப்ப தமிழ்மணம் சிறப்பிக்கப் போகிறது இந்த சமூக ஆர்வலர?

    ReplyDelete
  10. சிறகை விரிக்கும்.... பள்ளி மைதானம் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  11. இதுதான் பட்டாசு கிளப்புறதுங்கறதோ!!!! மைதானம், மௌனம், குற்றங்கள் ம்ம்ம்.. கலக்கல்...

    ReplyDelete
  12. மூன்றும், நான்கும் பிரமாதம் ...

    ReplyDelete
  13. நச்சுன்னு நாசுக்கா நான்கு கவிதைகள்..

    ReplyDelete
  14. Blogger சே.குமார் said...

    //பள்ளி மைதானங்கள்
    பசியோடு தவிக்கின்றன
    விடுமுறை நாட்களில்//

    WOW... Super anna...

    YESS...KUMAAR

    SIMPLY SUPER.

    ReplyDelete
  15. //நிகழ்காலக் குற்றங்கள்
    விடுதலை அடைகின்றன
    நாளைய பெருங்குற்றங்களில் //

    உண்மை தான் முதல்நாளில் நடக்கின்ற ஊழலைவிட மறுநாள் பெரிதாக ஒன்று வந்து அதை மறைத்துவிடுகிறது. மக்களை மறக்கசெய்யும் உத்தியோ என்னவோ?

    ReplyDelete
  16. //பள்ளி மைதானங்கள்
    பசியோடு தவிக்கின்றன
    விடுமுறை நாட்களில்//

    அடடடா....!

    ReplyDelete
  17. //பள்ளி மைதானங்கள்
    பசியோடு தவிக்கின்றன
    விடுமுறை நாட்களில்//

    உரமான கவிதைகள்.

    ReplyDelete
  18. அவ்வபோது வர இயலாமைக்கு வருந்துகிறேன்....

    மிக எளிமையான சத்தான கவிதைகள் பராட்டுக்கள்.... கதிரண்ணா.

    ReplyDelete
  19. கடைசி கவிதை சூப்பர்.. பள்ளி மைதானமும் அருமை

    ReplyDelete
  20. அன்பின் கதிர்

    நாலுமே நல்லா நச்சுன்னு இருக்கு - சூப்பர் போங்க .... நல்வாழ்த்துகள் கதிர் = நட்புடன் சீனா

    ReplyDelete
  21. அருமை அழகு. கவிதையின் ஆழம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்காமல் கவிதைக்குள் போனால் மிகப் பெரும் பிரமாண்டம் இருக்கிறது

    ReplyDelete

  22. நிகழ்காலக் குற்றங்கள்
    விடுதலை அடைகின்றன
    நாளைய பெருங்குற்றங்களில் // யம்மா... என்னம்மா எழுதுறீங்க... அட்டகாசமா இருக்கு!

    ReplyDelete

இது படிச்சீங்களா?