Saturday, 30 April 2011

ஈர முத்தங்களோடு



                   ஒவ்வொரு வருகையிலும்
                   உன்னை என் கண்களினூடாக
                   உயிர்க்குடுவை முழுதும்
                   வழிந்தோடும் வரை
                   வண்ணச்சொட்டுகளால்
                   நிரப்பிப் போகிறாய்

 
                   நிரப்ப மறந்த
                   தினங்களில்
                   சுற்ற மறுக்கும்
                   சுவர்க்கடிகார முட்கள்
                   இடம் பெயர்ந்து
                   ஒரு துக்கத்தின்
                   குறிப்புரையை
                   நாட்காட்டிக் காகிதத்தில்
                   செதுக்கிவிட்டுச்செல்கிறது

                   பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
                   கவிதை வரிகளாய்
                   சூரியகதிர்கள் திருட மறந்த
                   இளம் பனித்துளியாய்
                   காற்றில் கலந்துவந்து
                   கட்டியணைக்கும் பூ வாசமாய்
                   ஒவ்வொரு நொடியும்
                   எனக்குள் 
                   பூத்துக்கொண்டிருக்கிறாய்

  
                   எட்டிய தொலைவுக்கு
                   தட்டிக்கொடுக்கவும்
                   எட்டும் இலக்குக்கு
                   முடுக்கிவிடவும்
                   என் பாதையின் ஓரம்
                   மைல்கற்கள் மேல்
                   ஈர முத்தங்களோடு
                   காத்துக்கிடக்கிறாய்

                   -0-

14 comments:

  1. கவிதை அருமை கதிர்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வருகையிலும்
    ட்ரீட்செலவுக்கான
    உன் பயத்தை
    என் காலி வயிறு
    வழிந்தோடும் வரை
    நீர்ச் சொட்டுகளால்
    நிரப்பிப் போகிறாய்

    ReplyDelete
  3. நிரப்ப மறந்த
    தினங்களில்
    கத்திக் கொண்டேருக்கும்
    காலி வயிற்றின் பசி
    இடம்பெயர்ந்து
    காலியாவதற்கான‌ குறிப்புரையை
    நண்பனின் பர்ஸில்
    செதுக்கிவிட்டுச் செல்கிறது

    ReplyDelete
  4. பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
    உன் பிறந்த நாளின் நினைவாய்

    ட்ரீட் கேக்க மறந்த‌
    புதிய ஹோட்டல் உணவின் சுவையாய்
    காற்றில் கலந்துவந்து
    தாளிக்கும் சாப்பாட்டின் வாசமாய்
    ஒவ்வொரு நொடியும்
    எனக்குள்
    பூத்துக்கொண்டிருக்கிறாய்

    ReplyDelete
  5. எட்டிய தொலைவுக்கு
    தட்டிக்கொடுக்கவும்
    எட்டும் இலக்குக்கு
    முடுக்கிவிடவும்
    என் பாதையின் ஓரம்
    மைல்கற்கள் மேல்
    ட்ரீட்டுக்கான அழைப்புடன்
    காத்துக்கிடக்கிறாய்

    ReplyDelete
  6. நாங்களும் எழுதுவோம் " வெறும் வயிற்றோடு " கவிதை:-))

    ReplyDelete
  7. கவித கவித நல்ல இருக்கு பாஸ்

    ReplyDelete
  8. நீங்க இன்னும் யூத்துதாங்கண்னா ! :) பின்றீங்க....

    ReplyDelete
  9. மைல் கல் மேல குந்தி இருக்குறது யாரு..!!

    ReplyDelete
  10. thenu ma'am nalla kellunga yaar athu nu...

    ReplyDelete
  11. மிலிட்ரி வண்டி ட்ரைவரு டவுன் பஸ் ஓட்டினாப்பில இருக்குங்நா.....

    ReplyDelete
  12. ஒவ்வொரு வருகையுளும்
    ட்ரிட் செலவுஇல்லாமல்
    மனதில் உள்ளதைமாட்டும்
    ஈந்துவிட்டு செல்லும் நான்
    கவி கரங்களுக்கு மணார்ந்து
    சொல்வது வாழ்த்துக்கள் மட்டுமே

    ReplyDelete

இது படிச்சீங்களா?