Saturday, 31 March 2012

பொய் வாசம்





அவர்கள் இருவருமே
தனித்தனியாக அழைத்தார்கள்

கேட்டிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் கேட்டார்கள்

சொல்லியிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் சொன்னேன்

கேட்கவேண்டுமே எனக் கேட்டார்கள்
சொல்லவேண்டுமே எனச் சொன்னேன்

உண்மையா பொய்யாவென ஆராயும்
அவசியம் அவர்களுக்கில்லை

உண்மையைக் கொன்றேன்
பிணமாய் உயிர்ந்தெழுந்தது பொய்

ஊர்ந்து வந்த பொய்
ஓரமாய் பாய் விரித்தது மனதில்

நேரம் நகர நெருங்கிப் படுத்த
பொய்யின் கனம் பிணமாய் கனத்தது!

எட்டிப்பார்க்க மயக்கம் சூடியது
ஏராளமாய்க்கிடந்த பொய்களின் வீச்சத்தில்

பிணமாய் அலையும் பொய்களைக் கொல்ல
பிறிதொரு ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

-

6 comments:

  1. அருமை. வாழ்த்துகள். நன்றி

    ReplyDelete
  2. //பிணமாய் அலையும் பொய்களைக் கொல்ல
    பிறிதொரு ஆயுதம் தயாரிக்க வேண்டும்.//

    Nice! but for now, let's have a quarter!!

    ReplyDelete
  3. இதுதான் மன சாட்சி!

    ReplyDelete
  4. நல்ல சொல்லாட்சி
    அருமை

    ReplyDelete

இது படிச்சீங்களா?