கடந்தகாலம் நினைவில்மிதக்கட்டும், எதிர்காலம்நோக்கி நீந்துவோம்!
-
தங்கம்கிராமுக்கு 8 ரூபாஇறங்கினதையுமா ”தங்கம்விலை வீழ்ச்சி”னுஃப்ளாஸ் நீயூஸ்போடுவீங்க. உங்ககடமை உணர்ச்சிக்குஅளவேயில்லையாப்பா?
-
”ஒரு கட்டுரை எழுதனும், ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறதுனு தெரியலை”னு புலம்பின ஒரு எழுத்தாளர்கிட்டே....
’கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்க”னு சொன்னது ஒரு குத்தமா....
அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?
’கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்க”னு சொன்னது ஒரு குத்தமா....
அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?
-
ஒட்டுமொத்தஉலகத்தையும் ஒருகுழந்தையிடம் கண்டுவிடமுடிகிறது
-
தமிழ்பண்பாட்டில் காதலேஇல்லை - ’விஞ்ஞானி’ ராமதாஸ் # காமத்துப்பால் எழுதினதிருவள்ளுவர் மேலஒரு அவதூறுவழக்குப்போடு தலைவா?
-
ஃபேஸ்புக்என்பதை முகநூல்என மாற்றுவதுமொழிப்பற்று அல்ல... மொழி வெறி. ”சோறு” என்பதை’ரைஸ் / ஒயிட்ரைஸ்’ எனமாற்றாமல் இருப்பதேமொழி ஆளுமை!
-
டிவிரியல் எஸ்டேட்விளம்பரத்துல வர்றபக்கிங்களுக்கு அங்கேயே6x2-ல இடம்ஒதுக்கிடுங்க. இதுகபேசுற பொய்யைபார்க்கும்போது வயிறுஎரியுது :(
-
எல்லாரிடமும்நிறைய இருக்கின்றனசொல்லவும், தவிர்க்கவும்!
-
படிக்காதவனைவிடபடித்தவன் நல்லாசிந்திப்பானு ஏன்எதிர்பார்க்கனும். படித்தவன்படித்தவைகளில் மட்டும்சிந்திக்கலாம், படிக்காதவனுக்குஎல்லை இல்லை
-
புதிதாய்ஒரு உலகம்உருவாக்கி, அதற்குள்தொலைந்துபோக எல்லாருக்கும்ஆசைதான்.
-
வாசிப்பவர்களைவிடகவிஞர்கள் அதிகம்இருப்பது போலவே, பார்வையாளர்களைவிட அதிகமாகசெய்தி தொலைக்காட்சிகள்# தமிழ்ச் சூழல்
-
அன்புச்சுத்தியலின் அடியில்எல்லாம் தகர்கிறது!
-
”தப்புசெஞ்சா சாமிகண்ணைக் குத்தும்” எனும் நம்பிக்கை(!) பல இடங்களில்இருந்தால் நல்லதென்றேதோன்றுகிறது!
-
மௌனத்திற்குள்புதையும் சொற்கள்சில நேரத்தில்உரமாகவும், பலநேரத்தில் விதைகளாவும்மாறிவிடுகின்றன.
-
பனங்காட்டுநரி ”சலசலப்புக்குஅஞ்சுமா அஞ்சாதா” என்பதை எந்தப்பனங்காட்டு நரியிடம்நம்மாளுக கேட்டாங்கனேதெரியல!
-
பன்றிகளின்”உணவு” பன்றிகளுக்குஇழிவானதாக இருக்கமுடியாது!
-
நண்பனிடம்நீண்ட நாட்கள்கழித்து வாய்வலிக்கப் பேசினேன், அவன் காதுவலிப்பது குறித்துகவலையற்று. கரண்ட்இல்லை, காதில்வடிந்த இரத்தம்தெரியல
-
பாசமோ, பாதுகாப்போ தாராளமாஎன்னைய அண்ணானுகூப்பிட்டுக்குங்க, ஆனாபத்து வயசுஅதிகம் இருந்துட்டுஅண்ணானு கூப்பிடாதீங்கஅக்காக்களே!
-
நோயைவிடநோய் குறித்தஅச்சம் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கிறது# வளர்ச்சி Vs வீக்கம்
-
உலகம்அழிந்தால் சாவதுகுறித்து பயமில்லைஎன்போருக்கு சொல்லவிரும்புவது ”சாவுகுறித்து பயமில்லையென்றால்நீங்கள் எப்போதேஇறந்திருப்பீர்கள்”
-
உலகின்ஆகக்கொடும் விளம்பரம், கண்ணீர் அஞ்சலிபோஸ்டர்களில் பதியப்படும்பெயர்கள்!
-
கடந்துவந்திருக்கிறேன். கடந்துபோக வேண்டும்!
-
எல்லாவம்பு தும்புகளுமே”நாம் செய்யவேண்டியநம் வேலைகளைவிட்டுவிட்டு நாமேஇழுத்துப் போட்டுக்கொள்வது” எனும் ரகசியம்தாமதமாகவே புரிவதுஏன்?
-
எல்லாத்தவறுகளையும் சரிசெய்ய ”ஒருசரி” போதுமானதாகஇல்லை. எல்லாசரிகளையும் தவறுகளாக்கிட”ஒரு தவறு” போதுமானதாக இருக்கின்றது!
-
பெரும்முயற்சியெடுத்து படிக்கும்பாடங்களை விட, சட்டென ஒருநிகழ்வு கற்றுத்தரும்பாடம் ஒருபோதும்மறப்பதில்லை!
-
மலம்கிடந்தால் ”ஓவர்சீன் போட்டு” முகம் சுழித்துப்போவோர் உடலுக்குள்ளும்கொஞ்சம் மலம்இருக்கிறது என்பதுஏனோ புரிவதேயில்லை!
-
முதல்நாளேபடம் பாத்து(முக்கால்வாசிக்கு) மூக்குஉடைபடுற தியாகிகளுக்கு, தேறுற படத்தைஆறஅமர பாக்குறசோம்பேறிகள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்
-
”நான்வாதம் செய்யல, விவாதம் தான்செய்றே”னுசொல்லிட்டு நம்கருத்தை முன்வைத்து வாதத்தைமுன்னெடுத்துச் செல்வதுஎளிதாக இருக்கின்றது.
-
எல்லாவற்றையும்”சொல்லித்தான்” புரியவைக்கவேண்டும், ஈடுசெய்யவேண்டும் என்பதில்லை.
-
நிலாவில்காய்கறித் தோட்டம்அமைக்க சீனாதிட்டம் # அப்போ, இனிமே பாட்டி’மசால் வடை’ சுடுறதுக்கு சிரமப்படவேண்டியதில்லை!
-
7 கோடி இந்தியர்களுக்குவேலையில்லை: மத்தியஅரசு # ஏழரைக்கோடி கடையில”ஆட்கள் தேவை”னுபோர்டும் போட்டிருக்கான்.
-
”பெற்றோர் இருக்க பிள்ளை இறந்த சோகம்” குறித்து அருகிலிருக்கும் இருள் அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிலர் தங்கள் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோ நினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! :(
ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோ நினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! :(
-
பின் இரவின் மொட்டைமாடித் தனிமையில் ஏதோ ஒரு கைபேசியிலிருந்து ஏற்ற இறக்கமாய் காற்றில் மிதந்து வரும் ”மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்” உணர்த்துகிறது சொர்க்கம் இப்படியும் இருக்கும் என்பதாய்!
-
மனதிடம்”இது வேண்டும், இது வேண்டாம்” என என்னால்தீர்மானிக்க முடிவதில்லை. சூழல் அதைத்திறம்படத் தீர்மானிக்கின்றது.
-
வெளியேறும்வழி தெரியாதஎல்லா உள்நுழைவும் சூதாட்டமே!
-
எங்களைசீனாவுக்கு விரட்டுகிறார்மன்மோகன் - ரத்தன்டாடா# அவரு எங்களையும்தான்விரட்டுறாரு, ஆனாஎங்கேனுதான் எங்களுக்கும்அவருக்கும் புரியல
-
"பெண்கொசுதான் கடிக்கும்" என்பதைக் கண்டறிந்துஉலகுச் சொன்னவன், ஒரு கணவனாகத்தான்இருந்திருப்பான். :)
-
பலஆண்டுகளுக்குப்பிறகு கேம்லின்மை பேனாபிடிக்கும் வாய்ப்பு. எளிமையென பால்பாயிண்ட்பேனாவில் தொலைத்தஎழுத்தின் பழையவடிவம் கொஞ்சம்கண்டேன்
-
மூளையில்'டோபோமைன்' வேதிப்பொருள்சுரக்கும்போது ஏற்படும்கிளர்ச்சி, சந்தோசமுமேஇணைய சமூகவலைதளத்தில் அடிமையாககாரணம் #தப்புநம்முதில்ல
-
துரோகங்களில்தோற்பது மனிதர்கள்அல்ல. மனிதர்களைநம்பிய நம்பிக்கைதான்!
-
உலகின்செல்வாக்கு மிக்கவர்கள்பட்டியலில் 25 வதுஇடத்தில் ”ஃபேஸ்புக்மார்க் ஜூகர்பெர்க்” # இதெல்லாம் நாங்ககடுமையா உழைச்சுபோட்ட தர்மம்
-
நாலுட்விட் போட்டதுலஎல்லாக் கோபமும்(!) நீர்த்துப்போச்சுப்பா. இப்பஒரு பிரச்சனையும்இல்ல # இல்லாட்டிமட்டும் என்னத்தகிழிச்சி... தைச்சு
-
”கர்நாடகஅணைகளில் மொத்தம்எவ்வளவு தண்ணீர்உள்ளது” என்பதைக்கூடதெரிந்துகொள்ள கையாலாகாதவல்லரசாக இந்தியாஇருப்பதில் பெருமிதம்கொள்வோம்.
-
என்”கற்பனைக்கு” நிகரானஒரு நல்லவனையோ, கெட்டவனையோ இதுவரைக்கண்டதில்லை!
-
”அப்போ, என்னை ஏன்பெத்தீங்க?” ஒருமுறையேனும்பிள்ளைகள் கேட்காவிட்டால், பெற்றோரின் வளர்ப்பில்ஏதோ குறைஇருக்கிறதென்று அர்த்தம்! :)
-
ஒரு அற்பக் கொசுவிடம் இருந்து தப்பிப்பதற்காக
“கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை” .......................... என எத்தனையோ பயன்படுத்திய பிறகும்
”இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா” # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))
“கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை” .......................... என எத்தனையோ பயன்படுத்திய பிறகும்
”இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா” # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))
-
ஒருதவறான புரிதலுக்குவிநாடிப் பொழுதுபோதும். விளக்கம்பெற / தரஒரு யுகம்தேவைப்படுகிறது!
வீட்டுவாசற்படி கடக்கையில்சாக்கடைக்கு முகத்தைச்சுழிப்பதில் துவங்குகிறதுஅந்த தினத்திற்கானசகிப்புத்தன்மை!
-
உன்னைநீயாகவும், என்னைநானாகவும்..... # இப்போதைக்கும்எப்போதைக்கும்! :)
-
மரணம்மட்டுமே ஒருவனுடையகுற்றங்களை மற(றை)க்கச்செய்துபுனிதனாக்கும் என்றால்’கசாப்’பும்புனிதனே!
·






அன்பின் கதிர் - எலலாக் கீச்சுகளூமே அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteசிந்திக்க, இரசிக்க, புன்னகைக்க.. வைத்தத் தொகுப்பு.
ReplyDeleteஅனைத்து வரிகளுமே அருமை
ReplyDeleteஅற்புதமான வரிகள் சார்.
ReplyDeletesuper
ReplyDelete