Tuesday, 29 January 2013

கீச்சுகள் - 30



கடந்தகாலம் நினைவில்மிதக்கட்டும், எதிர்காலம்நோக்கி நீந்துவோம்!

-                  

தங்கம்கிராமுக்கு 8 ரூபாஇறங்கினதையுமாதங்கம்விலை வீழ்ச்சினுஃப்ளாஸ் நீயூஸ்போடுவீங்க. உங்ககடமை உணர்ச்சிக்குஅளவேயில்லையாப்பா?

-                     

ஒரு கட்டுரை எழுதனும், ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறதுனு தெரியலைனு புலம்பின ஒரு எழுத்தாளர்கிட்டே....

கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்கனு சொன்னது ஒரு குத்தமா.... 

அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?

-




ஒட்டுமொத்தஉலகத்தையும் ஒருகுழந்தையிடம் கண்டுவிடமுடிகிறது 

-           


தமிழ்பண்பாட்டில் காதலேஇல்லை - ’விஞ்ஞானிராமதாஸ் # காமத்துப்பால் எழுதினதிருவள்ளுவர் மேலஒரு அவதூறுவழக்குப்போடு தலைவா?

-                     

ஃபேஸ்புக்என்பதை முகநூல்என மாற்றுவதுமொழிப்பற்று அல்ல... மொழி வெறி. ”சோறுஎன்பதைரைஸ் / ஒயிட்ரைஸ்எனமாற்றாமல் இருப்பதேமொழி ஆளுமை!

-                     

டிவிரியல் எஸ்டேட்விளம்பரத்துல வர்றபக்கிங்களுக்கு அங்கேயே6x2- இடம்ஒதுக்கிடுங்க. இதுகபேசுற பொய்யைபார்க்கும்போது வயிறுஎரியுது :(

-

எல்லாரிடமும்நிறைய இருக்கின்றனசொல்லவும், தவிர்க்கவும்!

-                     

படிக்காதவனைவிடபடித்தவன் நல்லாசிந்திப்பானு ஏன்எதிர்பார்க்கனும். படித்தவன்படித்தவைகளில் மட்டும்சிந்திக்கலாம், படிக்காதவனுக்குஎல்லை இல்லை

-                     

புதிதாய்ஒரு உலகம்உருவாக்கி, அதற்குள்தொலைந்துபோக எல்லாருக்கும்ஆசைதான்.

-                     

வாசிப்பவர்களைவிடகவிஞர்கள் அதிகம்இருப்பது போலவே, பார்வையாளர்களைவிட அதிகமாகசெய்தி தொலைக்காட்சிகள்# தமிழ்ச் சூழல்

-                     


அன்புச்சுத்தியலின் அடியில்எல்லாம் தகர்கிறது!

-                     

தப்புசெஞ்சா சாமிகண்ணைக் குத்தும்எனும் நம்பிக்கை(!) பல இடங்களில்இருந்தால் நல்லதென்றேதோன்றுகிறது!

-                     

மௌனத்திற்குள்புதையும் சொற்கள்சில நேரத்தில்உரமாகவும், பலநேரத்தில் விதைகளாவும்மாறிவிடுகின்றன.

-                     

பனங்காட்டுநரிசலசலப்புக்குஅஞ்சுமா அஞ்சாதாஎன்பதை எந்தப்பனங்காட்டு நரியிடம்நம்மாளுக கேட்டாங்கனேதெரியல!

-                     

பன்றிகளின்உணவுபன்றிகளுக்குஇழிவானதாக இருக்கமுடியாது!

-                     

நண்பனிடம்நீண்ட நாட்கள்கழித்து வாய்வலிக்கப் பேசினேன், அவன் காதுவலிப்பது குறித்துகவலையற்று. கரண்ட்இல்லை, காதில்வடிந்த இரத்தம்தெரியல

-

பாசமோ, பாதுகாப்போ தாராளமாஎன்னைய அண்ணானுகூப்பிட்டுக்குங்க, ஆனாபத்து வயசுஅதிகம் இருந்துட்டுஅண்ணானு கூப்பிடாதீங்கஅக்காக்களே!

-

நோயைவிடநோய் குறித்தஅச்சம் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கிறது# வளர்ச்சி Vs வீக்கம்

-
உலகம்அழிந்தால் சாவதுகுறித்து பயமில்லைஎன்போருக்கு சொல்லவிரும்புவதுசாவுகுறித்து பயமில்லையென்றால்நீங்கள் எப்போதேஇறந்திருப்பீர்கள்

-

உலகின்ஆகக்கொடும் விளம்பரம், கண்ணீர் அஞ்சலிபோஸ்டர்களில் பதியப்படும்பெயர்கள்!

-

கடந்துவந்திருக்கிறேன். கடந்துபோக வேண்டும்!

-

எல்லாவம்பு தும்புகளுமேநாம் செய்யவேண்டியநம் வேலைகளைவிட்டுவிட்டு நாமேஇழுத்துப் போட்டுக்கொள்வதுஎனும் ரகசியம்தாமதமாகவே புரிவதுஏன்?

-                      

 

எல்லாத்தவறுகளையும் சரிசெய்யஒருசரிபோதுமானதாகஇல்லை. எல்லாசரிகளையும் தவறுகளாக்கிடஒரு தவறுபோதுமானதாக இருக்கின்றது!

-                     

பெரும்முயற்சியெடுத்து படிக்கும்பாடங்களை விட, சட்டென ஒருநிகழ்வு கற்றுத்தரும்பாடம் ஒருபோதும்மறப்பதில்லை!

-                     

மலம்கிடந்தால்ஓவர்சீன் போட்டுமுகம் சுழித்துப்போவோர் உடலுக்குள்ளும்கொஞ்சம் மலம்இருக்கிறது என்பதுஏனோ புரிவதேயில்லை!

-                     

முதல்நாளேபடம் பாத்து(முக்கால்வாசிக்கு) மூக்குஉடைபடுற தியாகிகளுக்கு, தேறுற படத்தைஆறஅமர பாக்குறசோம்பேறிகள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்

-                     

நான்வாதம் செய்யல, விவாதம் தான்செய்றேனுசொல்லிட்டு நம்கருத்தை முன்வைத்து வாதத்தைமுன்னெடுத்துச் செல்வதுஎளிதாக இருக்கின்றது.

-                     

எல்லாவற்றையும்சொல்லித்தான்புரியவைக்கவேண்டும், ஈடுசெய்யவேண்டும் என்பதில்லை.

-                     

நிலாவில்காய்கறித் தோட்டம்அமைக்க சீனாதிட்டம் # அப்போ, இனிமே பாட்டிமசால் வடைசுடுறதுக்கு சிரமப்படவேண்டியதில்லை!

-                     

7 கோடி இந்தியர்களுக்குவேலையில்லை: மத்தியஅரசு # ஏழரைக்கோடி கடையிலஆட்கள் தேவைனுபோர்டும் போட்டிருக்கான்.

-                     

பெற்றோர் இருக்க பிள்ளை இறந்த சோகம்குறித்து அருகிலிருக்கும் இருள் அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிலர் தங்கள் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோ நினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! :(

-
                     
பின் இரவின் மொட்டைமாடித் தனிமையில் ஏதோ ஒரு கைபேசியிலிருந்து ஏற்ற இறக்கமாய் காற்றில் மிதந்து வரும்மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்உணர்த்துகிறது சொர்க்கம் இப்படியும் இருக்கும் என்பதாய்!

-                     

மனதிடம்இது வேண்டும், இது வேண்டாம்என என்னால்தீர்மானிக்க முடிவதில்லை. சூழல் அதைத்திறம்படத் தீர்மானிக்கின்றது.

-                     



வெளியேறும்வழி தெரியாதஎல்லா உள்நுழைவும் சூதாட்டமே!

-                  

எங்களைசீனாவுக்கு விரட்டுகிறார்மன்மோகன் - ரத்தன்டாடா# அவரு எங்களையும்தான்விரட்டுறாரு, ஆனாஎங்கேனுதான் எங்களுக்கும்அவருக்கும் புரியல

-                     

"பெண்கொசுதான் கடிக்கும்" என்பதைக் கண்டறிந்துஉலகுச் சொன்னவன், ஒரு கணவனாகத்தான்இருந்திருப்பான். :)

-                     

 
பலஆண்டுகளுக்குப்பிறகு கேம்லின்மை பேனாபிடிக்கும் வாய்ப்பு. எளிமையென பால்பாயிண்ட்பேனாவில் தொலைத்தஎழுத்தின் பழையவடிவம் கொஞ்சம்கண்டேன்

-                     

மூளையில்'டோபோமைன்' வேதிப்பொருள்சுரக்கும்போது ஏற்படும்கிளர்ச்சி, சந்தோசமுமேஇணைய சமூகவலைதளத்தில் அடிமையாககாரணம் #தப்புநம்முதில்ல

-                     



துரோகங்களில்தோற்பது மனிதர்கள்அல்ல. மனிதர்களைநம்பிய நம்பிக்கைதான்! 

-                 

உலகின்செல்வாக்கு மிக்கவர்கள்பட்டியலில் 25 வதுஇடத்தில்ஃபேஸ்புக்மார்க் ஜூகர்பெர்க்” # இதெல்லாம் நாங்ககடுமையா உழைச்சுபோட்ட தர்மம்

-                     

நாலுட்விட் போட்டதுலஎல்லாக் கோபமும்(!) நீர்த்துப்போச்சுப்பா. இப்பஒரு பிரச்சனையும்இல்ல # இல்லாட்டிமட்டும் என்னத்தகிழிச்சி... தைச்சு

-                  

கர்நாடகஅணைகளில் மொத்தம்எவ்வளவு தண்ணீர்உள்ளதுஎன்பதைக்கூடதெரிந்துகொள்ள கையாலாகாதவல்லரசாக இந்தியாஇருப்பதில் பெருமிதம்கொள்வோம்.

-                     

என்கற்பனைக்குநிகரானஒரு நல்லவனையோ, கெட்டவனையோ இதுவரைக்கண்டதில்லை!

-                     

அப்போ, என்னை ஏன்பெத்தீங்க?” ஒருமுறையேனும்பிள்ளைகள் கேட்காவிட்டால், பெற்றோரின் வளர்ப்பில்ஏதோ குறைஇருக்கிறதென்று அர்த்தம்! :)

-                     

ஒரு அற்பக் கொசுவிடம் இருந்து தப்பிப்பதற்காக 
கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை  .......................... என எத்தனையோ பயன்படுத்திய பிறகும் 
இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))

-



ஒருதவறான புரிதலுக்குவிநாடிப் பொழுதுபோதும். விளக்கம்பெற / தரஒரு யுகம்தேவைப்படுகிறது!

-
 

வீட்டுவாசற்படி கடக்கையில்சாக்கடைக்கு முகத்தைச்சுழிப்பதில் துவங்குகிறதுஅந்த தினத்திற்கானசகிப்புத்தன்மை!

-                   

உன்னைநீயாகவும், என்னைநானாகவும்..... # இப்போதைக்கும்எப்போதைக்கும்! :)

-                     

மரணம்மட்டுமே ஒருவனுடையகுற்றங்களை மற(றை)க்கச்செய்துபுனிதனாக்கும் என்றால்கசாப்பும்புனிதனே!

·                      

5 comments:

  1. அன்பின் கதிர் - எலலாக் கீச்சுகளூமே அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சிந்திக்க, இரசிக்க, புன்னகைக்க.. வைத்தத் தொகுப்பு.

    ReplyDelete
  3. அனைத்து வரிகளுமே அருமை

    ReplyDelete

இது படிச்சீங்களா?