Tuesday, 6 April 2010

போச்சே... ரெண்டாயிரம்


ஏழு மாசத்துக்கு முந்தி போன
எம்.எல்.ஏ புண்ணியத்துல
இந்த மாசம் வருதாமே
எங்கூருக்கு எடத்தேர்தலு..

தார்ரோடு போடுவாங்களாம்
தண்ணி நிக்காம வருமாம்
பொசுக்பொசுக்குனு போற கரண்டு
இனி பொழுதுக்கும் எரியுமாம்...

டிவி பொட்டி தருவாங்களாம்
வேட்டி சேல தருவாங்களாம்
துண்டு பீடி குடிச்சவங்கூட
சிகரெட்ட பொட்டியா வாங்குறான்

கெடா விருந்து, கர்நாடகா சரக்கு
ஊரு ஒன்னுகூடி பிடிகொடுக்காம பேசுனா
தலைக்கு ரெண்டாயிரம் ரூவாயாம்
ஊட்டுக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோலாம்

ஊரே கேளு நாடே கேளுன்னு
எல்லாரும் கொண்டாட இந்த
பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!

___________________________________
நன்றி : யூத்புல் விகடன்

___________________________________

35 comments:

  1. நெற்களங்களில் உழைப்பது போய்த்தொலைந்து இன்று தேர்தல்களத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு...

    நெத்தியடி...

    ReplyDelete
  2. ஹை நான் தான் first...

    ReplyDelete
  3. மிகவும் அருமை கதிர் வோட்டுப் பெட்டியின் ரூபமும்.. அரசியலின் சுயரூபமும்..
    கடைசி வரி அருமை ...

    ReplyDelete
  4. விகடனில் இப்போதுதான் வாசித்தேன். நல்லா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  5. //பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
    கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

    "வட போச்சே"...

    ReplyDelete
  6. அல்லாம் சொல்லிபோட்டு தேர்தலன்னிக்கி, எண்ணிக்கையன்னிக்கி குடுக்கற பிரியாணி கோட்டரு உட்டுபுட்டீங்களே!அந்த கணக்குல ஆட்டைய போட்டுட்டாங்களோ!

    ReplyDelete
  7. யூத்புல் விகடனில் வெளியான கவிதைக்கு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அக்கக்கனு...இருக்கு கதிர்.

    கலக்கல்!!

    ReplyDelete
  9. ///////தார்ரோடு போடுவாங்களாம்
    தண்ணி நிக்காம வருமாம்
    பொசுக்பொசுக்குனு போற கரண்டு
    இனி பொழுதுக்கும் எரியுமாம்...

    டிவி பொட்டி தருவாங்களாம்
    வேட்டி சேல தருவாங்களாம்
    துண்டு பீடி குடிச்சவங்கூட
    சிகரெட்ட பொட்டியா வாங்குறான் /////////


    இந்த தருணங்களில் மட்டும் எப்படியோ நாம் உறங்கி போகின்றோம் . என்ன செய்வது எல்லாம் பணம் செய்யும் மாயம் .

    ReplyDelete
  10. அன்பின் கதிர்

    விகடனில் வெளியானதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்

    கவிதை அருமை - எண்ணம் ஆதங்கம் நன்று

    என்ன செய்வது ... காலத்தின் கோலம் - தவிர்க்க இயலவில்லை

    நல்வாழ்த்துகள் கதிர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  11. கவிதையில் குறிப்பிட்ட அத்தனையும் இடைதேர்தல்களின் போது நடக்கின்றன. போகிற போக்கை பார்த்தால் எப்படா நம்ம
    M.L.A.போய் சேருவாருன்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
  12. ஊரே கேளு நாடே கேளுன்னு
    எல்லாரும் கொண்டாட இந்த
    பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
    கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

    ப்ச்..!

    அவனுங்க பிடிச்சிருக்குற நாடிய, சரியா பிடிச்சீங்க கதிர். என்னிக்குத்தான் விடுதலையோ??

    ReplyDelete
  13. அடிசக்கை.
    என்னா எள்ளல் கதிர்.

    நாங்க இந்த கான்செப்ட்ல
    ஒரு குறும்படம் துவக்கினோம்.
    ப்ச்...முடிக்கல.

    ReplyDelete
  14. தேர்தலைப்பொருத்தமட்டில் எனக்கொரு ஆதங்கமிருப்பதுண்டு... ஒரு நியாயஸ்தன் போடும் ஓட்டு 10 அறிவிலிகளால் அமிழ்ந்துவிடுகிறதேயென்று.... பணத்திற்கு வாய்ப்பிளக்கும் பிணமாக எத்தனை அடிமைகளிங்கே....

    ஆதங்கத்தின் வெளிப்பாடு கவிதையில் புரிகிறது....

    யூத்புல் விகடனுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  15. இங்கயும் ஒட்டு போடணுமே...விகடன்!! வாழ்த்துகள்...ஐ...வட்டாரமொழி கவிதை அரிகள் அனைத்தும் அருமை அண்ணே...

    ReplyDelete
  16. ஒரு பேரிறப்பு, ஒரு பெரிசிறப்பு.... இரண்டையும் இணைத்து இரண்டாயிரம் இழப்பு என சொன்னது மிக சிறப்பு!

    பிரபாகர்...

    ReplyDelete
  17. ஹ்ம்ம்ம்ம்ம்ம்
    எங்க தொகுதியிலயும் தான் எம் எல் ஏ இருக்காரு......

    ReplyDelete
  18. நாம் செய்கின்ற தப்பை நாமே எழுதி படித்து சிரித்து மகிழ வேண்டியதுதான்.

    ReplyDelete
  19. ஆசிரியர் க.பாலாசி அவர்களை வழி மொழிகிறேன்.

    ஆசிரியர் க.பாலாசி அவர்களோட குசும்புக்கு அவரோட பின்னூட்டங்களைத் தொடருங்கள் அனைவரும்!

    ReplyDelete
  20. பெருசுக்காக வருந்தப்படற உங்க மனசும் ரொம்ப பெரிசு தாங்க கதிர்....
    உண்மையை இப்படி புட்டு வைக்க கூடாதும்மா தப்பு சாமி கண்ணை குத்திடும்.......

    ReplyDelete
  21. கெடா விருந்து, கர்நாடகா சரக்கு
    ஊரு ஒன்னுகூடி பிடிகொடுக்காம பேசுனா
    தலைக்கு ரெண்டாயிரம் ரூவாயாம்//

    யதார்த்தம்!!

    ReplyDelete
  22. அருமையான ஆதங்கம்!

    பார்த்து சூதனமா இருங்கப்பூ!

    ஆட்டோ வந்துடப்போவுது!

    ReplyDelete
  23. அவ்வ்வ்வ் ! போச்சே போச்சே

    ReplyDelete
  24. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

    ReplyDelete
  25. நல்ல பகிர்வு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  26. நச்சுன்னு இருக்கு கதிர்...

    ReplyDelete
  27. // பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
    கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

    :) வடை போச்சே.. !

    ReplyDelete
  28. பணப்பெட்டியின் அடியில்தான் இன்று ஓட்டுப் பெட்டி அகப்பட்டுக்கிடக்கிறது.
    அன்றாடங்காச்சியும் அடிக்கடி வரவேண்டும் தேர்தல் திருவிழா என்கிறான்.
    ஆள்பவனே செலவழிக்கும் லட்சங்களை கோடிகளாக்கும் லட்சியத்தில்...

    நாளைய தேசத்தில் மலிவுவிலை தேர்தலால் மனிதம் மலிந்து மட்டுமல்ல மரித்தும் போகும்.

    உங்கள் கவிதை அருமை கதிர்.

    ReplyDelete
  29. அடுத்தவ குறை சொல்லுவது உங்க உப தொழிலா?

    எதுக்கு சார் இந்த வெட்டி ஆதாங்கம்? ஒரு பைசாக்கு புன்னியமில்லாத ஆதங்கம்.

    நீங்க தேர்தல்ல நின்னு, மக்களுக்கு புத்தி சொல்லுங்க. "மக்களே மக்களே, நீங்க காசு வாங்காம வோட்டு போடுங்க. அப்போ தான் எங்கள மாதிரி படிச்சவங்க, அரசியலுக்கு வருவாங்க"

    அத விட்டுபுட்டு சும்மா பெனாத்துறீங்க.

    அண்ணன் தாரபுரத்தான் கருத்தை நான் வழிமொழிகிறேன்

    //நாம் செய்கின்ற தப்பை நாமே எழுதி படித்து சிரித்து மகிழ வேண்டியதுதான்//.

    மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருக்கு. கம்ப்யூட்டர் திரைய இன்னும் நல்ல உத்து பாருங்க. இப்படி வெட்டித்தனமா எழுதுனா சீத பேதி கணக்கா புடிங்கிரும். ஒரு சோடா கூட விக்க முடியாது.

    ReplyDelete
  30. :) எதிர்பார்ப்புகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது, அது மரணமெனினும் கூட.

    ReplyDelete
  31. >>பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
    கழிச்சு செத்துருக்கக்கூடாதா

    உண்மையில் மரித்தது ஜனநாயகம் தான். வென்றுள்ளது பண நாயகம்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?