Monday, 11 October 2010

மழை நேரம்


தடதடக்கும் ரயில் பயணங்களில்
சலசலக்கும் மழைச்சாரல்களால்
சன்னலோரக் கம்பிகளில்
தோரணமாய் தொங்கும் துளிகளில்

அதங்கிக் குலுங்கி சீறும் பெட்டியின்
காற்றைக் கிழிக்கும் வேகத்தில்
கோபத்தோடு உட்புகும் காற்றில்
கரைந்து தெறிக்கும் சிதறலில்

பேரிரைச்சலைத் தவிர்க்க
மூடும் கண்ணாடிச் சன்னல்களில்
அலையலையாய் வழிந்தோடும்
வெள்ளத்தோரணத்தில்

பெரும் மழைத்துளி தாளம் போடும்
சேற்று வயலில் சிந்திக்கிடந்த
வியர்வைத் துளியில் பிறந்த
வெள்ளப் பிரவாகத்தில் என

உலகின் ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றுகூட்டித் தனக்குள்ளே
தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!
_______________

27 comments:

  1. //உலகின் ஒட்டுமொத்த அழகையும்
    ஒன்றுகூட்டி தனக்குள்ளே
    தக்கவைத்திடத் தவறுவதில்லை
    மழை நேரங்கள்!//

    அழகு.

    ReplyDelete
  2. மழை நேரங்கள் எப்போதும் கவிதையானவை.

    ReplyDelete
  3. ஐயோ , மூச்சு விடாம படிச்சேன் ..
    நல்லா இருக்கு அண்ணா ..!!

    ReplyDelete
  4. ரயிலைக் கவிதைக்கு பயன்படுத்தினாலும் டிக்கட் வாங்கணும்னு ஒரு சட்டம் கொண்டுவரணும். வண்டில படுத்ததுக்கு ஒரு கவிதை, மழை பேஞ்சதுக்கு ஒரு கவிதைன்னு தேத்தியாச்சு. ஈரோட்ல மழைங்களா மாப்பு. ச்செரி ச்சேரி கலாய்ச்சது போதும். தகரக் கொட்டாயில தரதரன்னு மழை பேஞ்சா மாதிரி ஓட்டம் கவிதை:).

    ReplyDelete
  5. ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று மழை....

    கவிதை அழகு....

    ReplyDelete
  6. உலகின் ஒட்டுமொத்த அழகையும்
    ஒன்றுகூட்டித் தனக்குள்ளே
    தக்கவைத்திடத் தவறுவதில்லை
    மழை நேரங்கள்!


    ..... அழகிய நேரங்கள்....

    ReplyDelete
  7. //தக்கவைத்திடத் தவறுவதில்லை
    மழை நேரங்கள்!//

    உண்மை....

    "மழை என்ற நங்கை
    மண்ணுலகில் வந்து
    நடனமாடி சென்றாள்"

    ReplyDelete
  8. அசத்தல் ரகம் அல்ல, ஓகே.

    ReplyDelete
  9. மழை நேரத்து அழகை அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு கதிர்.ஆனால் இதே மழையை நான் சோகமாகப் பார்த்திருக்கிறேன்.
    மனநிலையைப் பொறுத்து மழை இடம் மாறுமோ !

    ReplyDelete
  10. பெரும் மழைத்துளி தாளம் போடும்
    சேற்று வயலில்
    அழகுங்க..

    ReplyDelete
  11. மழையழகு வசீகரம்!

    ReplyDelete
  12. காண கண்கோடி வேண்டும்.. அதை இப்படி எழுதவும் கைவரவேண்டும்....

    ReplyDelete
  13. அதே அதே.
    சூப்பர், இங்கேயும் மழையா..

    ReplyDelete
  14. கதிர்,

    இப்பொழுதெல்லாம் கவிதைகள் எழுத்தப்படுவதற்கு மட்டுமே “மழை” பெய்கிறது.

    மழை நேரம் - மயக்கும் நேரம்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ennai muluthai arintha uyir thozhi mazhai mattume

    ReplyDelete
  17. மழை நேரங்கள் கவித்துவமானவை! அது குறித்து எழுதும் எல்லாவற்றையும் அழகாக்கி விடுகிறது மழை...
    உங்களது கவிதையையும்தான் ... கவிதை அழகு !!

    ReplyDelete
  18. ஓ...ஓ...ஓ...மழை பற்றி நீங்க எழுதியது ரொம்ப ரொம்ப அழகு கதிர். மழை , ரயில், யானை ,கடலலை ,ஆகாயவிமானம் இதெல்லாம் பார்க்கபார்க்க சலிக்காது. நீங்க மழையை ரயிலில் ஏற்றியது இன்னும் சூப்ப்ப்ப்ப்பர்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?